பாபாஜி தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இமயமலையில் இருக்கும் பாபா கோயில் அருகே பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளார்.
ரஜினிகாந்த் பாபாவின் தீவிர பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ,பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் கிளம்பிவிடுவார் ரஜினிகாந்த்.
அவர் பாபாவை தரிசிக்க இமயமலை செல்லும் போது செல்போன் கூட பயன்படுத்தமாட்டார். வீட்டிற்கு அவராகவே போன் செய்தால் தான் அவருடன் பேசவே முடியும்.
இமயமலையில் பாபாவை தரிசித்து வந்தால், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட புத்துணர்ச்சி கிடைக்குமாம். இப்படி பாபாஜியை பின்பற்றி வரும் ரஜினி, இமயமலையில் உள்ள பாபாவை தரிசிக்க செல்லும் பக்தர்கள் தியானம் செய்ய வசதியாக, “ஸ்ரீ பாபஜி ஆஸ்ரமம்” என்ற தியான மண்டபத்தை கட்டியுள்ளார் ரஜினி.
இந்த கட்டிடம் அடுத்த மாதம் 10ம் தேதி கிரக பிரவேசம் நடைப்பெற உள்ளது என ரஜினியின் நண்பர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பாபாவின் தீவிர பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ,பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் கிளம்பிவிடுவார் ரஜினிகாந்த்.
அவர் பாபாவை தரிசிக்க இமயமலை செல்லும் போது செல்போன் கூட பயன்படுத்தமாட்டார். வீட்டிற்கு அவராகவே போன் செய்தால் தான் அவருடன் பேசவே முடியும்.
இமயமலையில் பாபாவை தரிசித்து வந்தால், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட புத்துணர்ச்சி கிடைக்குமாம். இப்படி பாபாஜியை பின்பற்றி வரும் ரஜினி, இமயமலையில் உள்ள பாபாவை தரிசிக்க செல்லும் பக்தர்கள் தியானம் செய்ய வசதியாக, “ஸ்ரீ பாபஜி ஆஸ்ரமம்” என்ற தியான மண்டபத்தை கட்டியுள்ளார் ரஜினி.
இந்த கட்டிடம் அடுத்த மாதம் 10ம் தேதி கிரக பிரவேசம் நடைப்பெற உள்ளது என ரஜினியின் நண்பர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.