ஆப்நகரம்

கஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 1:09 pm
கடந்த ஆண்டு தமிழ்நாட்டை தாக்கிய கஜா புயலால், பல ஊர்கள் நாசமாகின. அதிலும் குறிப்பாக நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
Samayam Tamil EHYRJ4YU0AA7WOr


இதனால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

வாவ்...லண்டனில் பாகுபலி படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!

இதற்கிடையில் கஜா புயலால் வீடுகள் இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன.


இந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் நாகை மாவட்ட மன்ற செயலாளர் ராஜேஸ்வரனும் சென்றிருந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

இதையொட்டி ட்விட்டரில் #மக்கள்_நலனில்_ரஜினி மற்றும் #RMMinGajaAffectedAreas என்ற இரு ஹேஸ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்