ஆப்நகரம்

மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த்!

அரசியல் நிலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2018, 5:08 pm
அரசியல் நிலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மன்றநிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்!


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு கடந்தாண்டு இறுதியில் பதில் அளித்தார். தேர்தலில் போட்டியிடப் போவது உறுதிஎன்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, நற்பணி மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றினார் . இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டம் 5 கட்டங்களாக நடைபெற்று, நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் குறித்த தன்னுடைய கருத்துகளை அவ்வப்போது ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று அவரை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூமகாலிங்கமும் உடன் இருந்தார்.

ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இன்னும் வெளியாகாத நிலையில் இவர்களது சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்