ஆப்நகரம்

ரஜினி - கமல் உடன் இணையும் படம் என்ன ஆனது? எப்போது அறிவிப்பு? - லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தான் இயக்கவுள்ள படம் பற்றிய அறிவிப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆன பிறகு வரும் என லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.

Samayam Tamil 17 Aug 2020, 9:38 am
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். மாநகரம் அதனைத் தொடர்ந்து கைதி ஆகிய படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவை இரண்டும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். லோகேஷின் கைதி படம் சென்ற வருடம் விஜய்யின் பிகில் உடன் பாக்ஸ் ஆபிசில் மோதிய நிலையிலும் நல்ல வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Rajinikanth and Lokesh Kanagaraj


இந்நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் உடன் கூட்டணி சேர உள்ளார் என பல மாதங்களுக்கு முன்பு இருந்தே கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

இந்த ப்ராஜெக்ட்டின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். "இப்போதைக்கு நான் இந்த படம் பற்றி எந்த பதிலையும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இது பற்றிய முடிவை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்" என கூறி இருக்கிறார்.

மேலும் அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் எழுதி வருவதாகவும் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அப்படி கூறி இருப்பதன் மூலமாக ரஜினியை இயக்கும் படம் கைவிடப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

மேலும் இந்தப் படம் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் அடுத்து ஒரு முன்னணி தெலுங்கு தயாரிப்ப நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ் ஆன அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி முடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இது தான் முதல் முறை. மேலும் விஜய் சேதுபதி மிகவும் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார் என அவரே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.

மேலும் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியர் ரோலில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். அவருக்கும் கல்லூரி ஆசிரியர் ரோல் தான் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக மாஸ்டர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா லாக் டவுனால் தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதால் அதை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் மீண்டும் தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படுகிறது என்பதை பொறுத்து இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பாளரே கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்