ஆப்நகரம்

உருவாகிறதா ’படையப்பா 2’ திரைப்படம்? நீலாம்பரியை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார்!

நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 19 Jul 2018, 1:06 pm
சென்னை: நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து பேசியுள்ளார்.
Samayam Tamil Ravikumar Rajini


ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காலா’. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்து முடித்த, ஷங்கர் இயக்கத்தில் உருவான ’2.0’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எனவே இதனுடன் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, ரஜினி தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரஜினி சம்மதித்து இருக்கும் படத்திற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணனை சந்தித்துள்ளார். ஆகையால் ’படையப்பா 2’ படம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக காலா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்கள் பாட்ஷா ஆண்டனி, படையப்பா நீலாம்பரி, காலா நானா படேகர் என்றார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் ரஜினி நடித்திருந்தார்.

அதில் லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இதையடுத்து ஜக்குபாய், ராணா படங்களில் இருவரும் கூட்டு சேர்வதாக கூறப்பட்டது. ஆனால் அவை பொய்த்துப் போயின. எனவே ‘படையப்பா 2’ மூலம் மீண்டும் ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி உருவாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Rajinikanth, KS Ravi Kumar may rejoin for Padaiyappa 2 movie soon.

அடுத்த செய்தி

டிரெண்டிங்