ஆப்நகரம்

நான் தாதா சாகேப் பால்கே விருது பெறும்போது கே.பி. இல்லையே என வருத்தம்: ரஜினி

தான் தாதா சாகேப் பால்கே விருது பெறப் போகும் இந்த நேரத்தில் கே. பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 10:27 am

ஹைலைட்ஸ்:

  • தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினி
  • நாளை டெல்லியில் நடக்கும் தேசிய விருதுகள் வழங்கும் விழா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil rajinikanth
தேசிய விருதுகள் வழங்கும் விழா நாளை டெல்லியில் நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே. பாலசந்தர் இல்லையே என்பது தான் வருத்தமாக உள்ளது என்றார்.

நாளை ரஜினிக்கு மட்டும் அல்ல அவரின் மூத்த மருமகன் தனுஷுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் சிவசாமியாக வாழ்ந்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

ஒரே மேடையில் மாமனாரும், மருமகனும் விருது பெறப் போவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ஆடுகளம் படத்திற்காக கடந்த 2010ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கினார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

எதை வைத்து சமந்தாவுக்கு பல பேருடன் கள்ளத்தொடர்புனு சொன்னேன் தெரியுமா?: டாக்டர் விளக்கம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்