ஆப்நகரம்

'ஒத்த செருப்பு' அற்புதம்: பார்த்திபனை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒத்த செருப்பு' படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Samayam Tamil 16 Sep 2019, 2:58 pm
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிக்கு பெயர் போனவர் நடிகர், இயக்குநர் பார்த்திபன். அவர், தனது அடுத்த முயற்சியாக தான் ஒருவர் மட்டுமே நடித்து, எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே முழுப்படத்திலும் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rajinikanthjpg


இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். ஒலிக்கலவையை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வெளிவரும் முன்பே ஒரு உலக சாதனையை படைத்திருக்கிறது Asia book of record, India book of records-ல் தனிநபர் திரைப்பட முயற்சி பிரிவில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது.

ஒத்த செருப்பு


வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பிரபலங்கள் பலரும் முன்னதாகவே பார்த்து பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒத்த செருப்பு படத்தை பாராட்டி ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன், இந்தப்படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குறிய முயற்சி. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

கேமரா, எடிட்டிங், பின்னணி இசை, பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் இக்கடிதத்தினை பகிர்ந்திருந்தார். இந்தக் கடிதம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பார்த்திபனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்