ஆப்நகரம்

இளையதலைமுறையே கடவுளை நம்புங்கள்: ரஜினி வேண்டுகோள்

இளைஞர்கள் அனைவரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 15 Mar 2018, 8:57 am
இளைஞர்கள் அனைவரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil rajinikanth request to younger generation
இளையதலைமுறையே கடவுளை நம்புங்கள்: ரஜினி வேண்டுகோள்


இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜிகாந்த் நேற்று ரிஷிகேஷ் சென்றார். அங்கு அவரிடம் பகுதி நேர அரசியல்வாதி என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, தான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று மட்டுமே குறிப்பிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

தனது இமயமலை பயணத்திற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது ’நான் எப்போதும் இமயமலைக்கு வருவேன். கடந்த 8 ஆண்டுகளாக வர முடியவில்லை. அதனால் தான் இப்போது வந்துள்ளேன். இது வழக்கமான பயணம்தான். எனக்கு கங்கை நதி மிகவும் பிடிக்கும். அதை நான் நேசிக்கிறேன். இந்த பயணத்திற்கும் அரசியலுக்கு தொடர்பு இல்லை. மேலும் இளைய தலைமுறையினர் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் மீது முழு நம்பிக்கை வைக்க அவர்களது தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். இதுவே இளைய தலைமுறைக்கு என் வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்