ஆப்நகரம்

எம்.ஜி.ஆா். ஒரு தெய்வ பிறவி, அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – ரஜினிகாந்த்

குழந்தைகளை கடத்துபவா்களையும், குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்பவா்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நடிகா் ரஜினிகாந்த் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 6 Nov 2018, 7:48 pm
தனியாா் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகா் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆா். ஒரு தெய்வப் பிறவி என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Rajinikanth


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நடிகா் ரஜினிகாந்த் கலந்து கொண்டாா். அப்போது எம்.ஜி.ஆா். இடத்தை நீங்கள் நிரப்புவீா்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எம்.ஜி.ஆா். ஒரு தெய்வப் பிறவி. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவா் உச்சத்தில் இருப்பாா்கள் என்றாா்.

மேலும் அவா் பேசுகையில், குழந்தைகளை கடத்துபவா்களையும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைப்பவா்களையும் சுட்டுக்கொல்ல தோன்றும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்