ஆப்நகரம்

காலா படத்தில் அரசியல் இருக்கும்... ஆனால் நீங்கள் நினைக்கும் படம் இல்லை - ரஜினி பேச்சு

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.

Samayam Tamil 9 May 2018, 11:04 pm
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
Samayam Tamil rajini


காலா பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி படம் குறித்து மட்டுமில்லாமல் பல்வேறு விஷயங்களை பேசினார்.

ரஜினி பேசியதாவது:

இந்த விழாவைப் பார்க்கும் போது பாடல் வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, ஏதோ பட வெற்றி விழா மாதிரி தெரிகிறது. கடைசியாக சிவாஜி பட வெற்றி விழா கொண்டாடினோம். அதில் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.. அவரின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறந்தால் கூட பரவாயில்லை;
நதிகளை இணைப்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. குறைந்தது தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டு நான் இறந்துவிட்டால் கூட போதும் என உருக்கமாக பேசினார்.

அதிபுத்திசாலி ஆபத்து:
புத்திசாலிகளுடன் ஆலோசனை கேட்கலாம், ஆனால் அதிபுத்திசாலிகளிடம் கேட்கவே கூடாது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் என் பாதையில் தான் சென்றுகொண்டிருப்பேன்.

Read More : காலா படத்திற்கு வந்த சோதனை : ஒரே இடத்தில் படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம்

இதோ வந்துட்டேன்... அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி கருத்து

”ரஜினியால் வாழ்ந்தவர்கள்... இன்று அவரை விமர்சிக்கிறார்கள்”காலா விழாவில் தனுஷ் கவலை

”காலா... மக்களில் ஒருவருடைய படம்” பா. ரஞ்சித்

கருப்பு நிற உடையில் ’காலா’ பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

40 வருடங்களாக நடித்து வருகிறேன். என் கதை முடிந்துவிட்டது என சிலர் கூறுகின்றனர். என்னை ஆண்டவனும், மக்களும் தான் ஓடவைக்கின்றனர் அதனால் ஓடுகிறேன்.

திரைப்படங்களிலும் சரி, வாழ்க்கையிலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால் மிக நல்லவனாக இருக்ககூடாது. உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த படத்தில் அரசியல் இருக்கும், ஆனால் இது அரசியல் படம் கிடையாது. நான் அரசியலுக்கு வருவேன், ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என ரஜினி பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்