ஆப்நகரம்

செப்டம்பர் 2வது வாரம்: ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் ரஜினி!

காலா படப்பிடிப்புக்கு பிறகு மீண்டும் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 31 Aug 2017, 7:31 pm
காலா படப்பிடிப்புக்கு பிறகு மீண்டும் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rajinikanth will meet his fans coming september second week in chennai
செப்டம்பர் 2வது வாரம்: ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் ரஜினி!


கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தில் நடித்து வருகிறார். கடந்த மே மாதம் கிட்டத்தட்ட 15 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது அரசியல் குறித்து அவர் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது காலா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, படப்பிடிப்பு முடிந்த பிறகு வரும் செப்டம்பர் 2வது வாரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினிகாந்தின் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்