ஆப்நகரம்

AR Murugadoss: ரஜினி கேட்ட சம்பளத்தை ஒரே தவணையாக கொடுத்த லைகா நிறுவனம்!

பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான லைகா, ரஜினி கேட்ட ரூ. 70 கோடி சம்பளத்தை ஒரே தவணையாக கொடுத்துள்ளதாம்.

Samayam Tamil 28 Feb 2019, 9:28 am
நடிகர் ரஜினிகாந்த், ‘பேட்ட’ படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவையும், அனிருத் இசையும் கவனிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
Samayam Tamil rajini


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். ‘2.0’. ‘பேட்ட’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ரஜினியின் சம்பளத்தை கேட்ட தயாரிப்பு நிர்வாகம் முதலில் அதிர்ச்சியடைந்தது. அதன்பின் ரஜினி கேட்ட சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.

அதோடு நில்லாமல் ரஜினியின் சம்பளத்தைப் படப்பிடிப்பு தொடங்குமுன்பே கொடுத்துவிட்டார்களாம். அதுவும் ஒரே தவணையில் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி லைகா நிறுவனம் கொடுத்த தொகை ரூ. 70 காடி என்றும் சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்