ஆப்நகரம்

ரயிலில் சிக்கி கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி மக்கள் மன்றம் நிதியுதவி!

ரயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த காசி விஸ்வநாதன் என்பவருக்கு, நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 May 2018, 2:03 pm
ரயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த காசி விஸ்வநாதன் என்பவருக்கு, நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rajini-7zd


நடிகர் ரஜினியின் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதன் ஒருகட்டமாக ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் இயாலாத மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த, ரஜினியின் தீவிர ரசிகரான காசி விஸ்வநாதன் என்பவருக்கு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

மேலும் காசிவிஸ்வநாதன் குணமானபிறகும் தேவையான அனைத்துஉதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று சுதாகர் மூலம் ரஜினி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்