ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவகாரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வினுக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே தற்போது கசப்புணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கசப்புணர்வு இருந்ததாகவும், பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்ததாகவும், ஆனால், எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த சவுந்தர்யா வீட்டில் சிறிது நாட்கள் தங்கியதாகவும், அப்போது, மகளை சமாதானப்படுத்தியதாகவும், ஆனால், தந்தையின் சொல்லை சவுந்தர்யா கேட்கவில்லை என்றும், அஸ்வினை பிரிவதிலேயே குறியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப நல நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விவகாரத்துக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால், ''அவர்கள் இருவரும் தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். அது உண்மைதான். அவர்களை சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவகாரத்துக்கு அவர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. அவர்களை சேர்த்து வைக்கவே குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்'' என்று ரஜினியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 2010, செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தனர். இவர்களுக்கு கடந்த 2015, மே 6 ஆம் தேதி வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இதை உறுதி செய்து கொள்ள அஸ்வினிடம் பேசியபோது, அவர் அதுகுறித்து எந்த பதிலையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்தை வைத்து ''சுல்தான் வாரியார்'' என்ற திரைப்படத்தை தயாரித்த சவுந்தர்யா திடீரென அந்தப் படத்தை கைவிட்டு, பின்னர் நாட்டிலேயே முதன் முதலாக மோஷன் பிக்சரான கோச்சடையான் தயாரித்தார். இதில் இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இவர் சொந்தமாக ஆகெர் பிக்சர் புரடக்ஷன் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வினுக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே தற்போது கசப்புணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கசப்புணர்வு இருந்ததாகவும், பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்ததாகவும், ஆனால், எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த சவுந்தர்யா வீட்டில் சிறிது நாட்கள் தங்கியதாகவும், அப்போது, மகளை சமாதானப்படுத்தியதாகவும், ஆனால், தந்தையின் சொல்லை சவுந்தர்யா கேட்கவில்லை என்றும், அஸ்வினை பிரிவதிலேயே குறியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப நல நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விவகாரத்துக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆனால், ''அவர்கள் இருவரும் தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். அது உண்மைதான். அவர்களை சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவகாரத்துக்கு அவர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. அவர்களை சேர்த்து வைக்கவே குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்'' என்று ரஜினியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 2010, செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தனர். இவர்களுக்கு கடந்த 2015, மே 6 ஆம் தேதி வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இதை உறுதி செய்து கொள்ள அஸ்வினிடம் பேசியபோது, அவர் அதுகுறித்து எந்த பதிலையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்தை வைத்து ''சுல்தான் வாரியார்'' என்ற திரைப்படத்தை தயாரித்த சவுந்தர்யா திடீரென அந்தப் படத்தை கைவிட்டு, பின்னர் நாட்டிலேயே முதன் முதலாக மோஷன் பிக்சரான கோச்சடையான் தயாரித்தார். இதில் இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இவர் சொந்தமாக ஆகெர் பிக்சர் புரடக்ஷன் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.