Rakhi Sawant Shocking Allegations On Her Husband Adil Durrani
Rakhi Sawant: 'என்னை நிர்வாணமாக படம் பிடித்து'.. இரண்டாவது கணவர் மீது ராக்கி சாவந்த் பகீர் புகார்!
Rakhi Sawant: தனது இரண்டாவது கணவர் தன்னை நிர்வாணமாக படம் பிடித்து அதை பணத்திற்காக விற்றுவிட்டதாக நடிகை ராக்கி சாவந்த் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தன்னை நிர்வாணமாக படம் பிடித்து தனது இரண்டாவது கணவர் அதை பணத்திற்காக விற்றுவிட்டதாக நடிகை ராக்கி சாவந்த் பகீர் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கி சாவந்த்
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். தமிழ் சினிமாவிலும் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் ராக்கி சாவந்த். பிக்பாஸ் உட்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் ராக்கி சாவந்த். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ராக்கி சாவந்த் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்த ராக்கி சாவந்த் பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் மைசூரை சேர்ந்த அடில் துர்ரானி என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்த ராக்கி சாவந்த், தனது திருமண தகவலை 9 மாதங்கள் கழித்து சமீபத்தில்தான் போட்டோக்களுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆனால் ராக்கி சாவந்துடன் நடைபெற்ற திருமணம் போலியானது, அது உண்மையில்லை என மறுத்தார் அடில் துர்ரானி. இதையடுத்து தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார் ராக்கி சாவந்த்.
இதன் தொடர்ச்சியாக தனது கணவர் அடில் துர்ரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தனது உடம்பில் ஏற்பட்ட காயங்களை காட்டி கதறி அழுதார் ராக்கி சாவந்த். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அடுத்த நாளே ராக்கி சாவந்த் வீட்டில் வைத்து அவரது கணவர் அடில் துர்ரானியை கைது செய்தனர். அடில் துர்ரானி நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந் தனது இரண்டாவது கணவர் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Aishwariyaa Bhaskaran: விவாகரத்துக்கு பிறகு வேறொருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்... ஆனால்... மனம் திறந்த வாரிசு நடிகை!
நிர்வாணமாக படம்பிடித்து...
அதாவது தனது கணவர் அடில் துர்ரானி தன்னை நிர்வாணமாக படம் பிடித்து அதனை பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊட்கம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், தனது நிர்வாண வீடியோக்களை எடுத்து அதனை அடில் மக்களுக்கு விற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இந்த வழக்கு சைபர் கிரைம் துறையிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அடில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தனு சாண்டலுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருப்பதாகவும், அடுத்து அவரையும் திருமணம் செய்வார் என்றும் கூறியுள்ளார். Dada Review: கண்ணீர்விட வச்சிட்டிங்க கவின்...நிச்சயம் பிளாக் பஸ்டர்தான்.. ரிலீஸுக்கு முன்பே அப்ளாஸை அள்ளும் டாடா!
சித்திரவதை செய்தார்...
இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே மீடியாக்களை சந்தித்த ராக்கி சாவந்த், அடிலுக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாது. அதனால் தனது தரப்பு நியாயத்தை கூற கோர்ட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மருத்துவ பரிசோதனைகள் முடிந்துவிட்டது என்றும் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்திருப்பதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளளார். அடில் தன்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார் என்றும் தனது OTPயை எடுத்து தனது பணத்தை திருடினார் விட்டார் என்றும் ராக்கி சாவந்த் குற்றம்சாட்டினார். Azeem, Biggboss: சார் எத்தனை படம் சைன் பண்ணியிருக்கீங்க? அசீமை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.