ஆப்நகரம்

200 குடும்பங்களுக்கு தினமும் உணவளிக்கும் ராகுல் ப்ரீத்

கொரோனா ஊரடங்கால் உணவுக்கு கூட வழி இல்லாமல் இருந்த 200 குடுப்பங்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் ராகுல் ப்ரீத் சிங்.

Samayam Tamil 4 Apr 2020, 12:32 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். தற்போது ஷங்கரின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ராகுல்.
Samayam Tamil Rakul Preet


மேலும் கடந்த சில வருடங்களாக ஹிந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், Thank God என்ற படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தன் வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகிறார் அவர்.

வீட்டில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடீயோக்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் அவர்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் சிங் வீடு உள்ள குர்கான் நகரில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்கள் வசிக்கும் சேரி பகுதியில் 200 குடும்பங்கள் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுள்ளனர். அது பற்றி ராகுல் ப்ரீத்தின் தந்தை அவரிடம் கூறியுள்ளார்.

உடனே 200 குடும்பங்களுக்கும் தினமும் இரண்டு வேளை உணவு செய்து விநியோகிக்க ராகுல் ப்ரீத் உதவி செய்துள்ளார். ஏப்ரல் இறுதி வரை உணவு வழங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ள ராகுல், மேலும் ஊரடங்கு தொடர்ந்தால் அது நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ராகுல் ப்ரீத்தின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்