ஆப்நகரம்

எவன் கெளப்பிவிடுறான்னே தெரியலையே, கையில கிடைச்சான்...: ரகுல் ப்ரீத் சிங் குமுறல்

என்னை பற்றி எவன் கெளப்பிவிடுறான்னே தெரியவில்லையே என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடுப்பில் உள்ளார்.

Samayam Tamil 26 Sep 2019, 9:09 am
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஆனால் தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.
Samayam Tamil rakul preet singh


இந்தியில் அவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து நடித்த தே தே பியார் தே படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படத்தில் நடித்த தபு தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தன்னைப் பற்றியே பேச வைத்துவிட்டார்.

இந்நிலையில் சம்பள விஷயத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஓவர் கறாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவ அவர் விளக்கமும் அளித்தார். பேசிய சம்பளத்தை கொடுக்காவிட்டால் யாருக்குத் தான் கோபம் வராது. நான் என்ன அதிகமாகவா கேட்டேன், பேசிய சம்பளத்தை குறைக்காமல் கொடுக்க வேண்டும் என்று தானே கேட்டேன். அதற்கு போய் இப்படி வேறு மாதிரி பேசுகிறார்களே என்று அவர் கவலையில் உள்ளாராம்.

சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல, எந்த ஹீரோனாலும் சரி: ஐஸ்வர்யா ராஜேஷ்

மேலும் ரகுலை பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது. அவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்ற வதந்தி தான் அடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. ஊர், உலகத்தில் எத்தனையோ நடிகைகள் இருக்க, அது ஏன் என்னைப் பற்றி மட்டும் வதந்தி பரவுகிறது என்பது தான் ரகுல் ப்ரீத் சிங்கின் கவலையே.

என்னை பற்றி வதந்தி கிளப்பிவிடுகிறவன் மட்டும் கையில் கிடைச்சான் சட்னி தான் என்று குமுறுகிறாராம். அவர் கோபமும் நியாயம் தானே. இது போதாது என்று சில நடிகைகள் வேறு ரகுலை பற்றி ஒரு விஷயத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சுபம்! சூரரை போற்று படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா

இதை எல்லாம் தாண்டி தான் ரகுல் ப்ரீத் சிங் நடித்துக் கொண்டிருக்கிறார். ரகுல் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 14 படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்