ஆப்நகரம்

எனக்கு படம் இல்லையா? யார் சொன்னது ? தொடர்ந்து 5 படங்களில் நடிக்கிறேன்: ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங்கிற்கு புதிய பட வாய்ப்புகள் வருவதில்லை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Samayam Tamil 13 Feb 2019, 10:27 am
ரகுல் பிரீத் சிங்கிற்கு புதிய பட வாய்ப்புகள் வருவதில்லை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.
Samayam Tamil NTLRG_20180104155152770479


ரகுல் பிரீத் சிங் கார்த்தி ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் செம ஹிட்டானதால் அடுத்தடுத்து தமிழில் கமிட் ஆகி வருகிறார். கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கும் ‘எஜிகே’ படத்தில் நடத்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று தான் நினைத்தார் ரகுல் பிரீத்சிங். ஆனால் அந்த படத்தின் தோல்வி அவரது தெலுங்கு சினிமா மார்க்கெட்டிற்கே உலை வைத்து விட்டது. இதனால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை என்று செய்திகள் பரவியது.

இந்த வதந்தியால் கடுப்பான ரகுல் பிரீத்சிங், தொடர்ந்து 5 படங்கள் நடித்து வருவதாக கூறியுள்ளார். தேவ் வெளியாவதை தொடர்ந்து சூர்யாவுடன் நடிக்கும் எஜிகே படம் வெளியாகும் என்றும் இதைத்தொடர்ந்து நாகசைதன்யாவுடன் ’வென்கை மாமா’ மற்றும் இரண்டு இந்தி படங்களில் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்