ஆப்நகரம்

தொடர் தோல்வியால் தெலுங்கிற்கு சிறிது இடைவெளி விட்டு தமிழுக்கு வரும் ரகுல் பரீத் சிங்!

தான் நடித்த மூன்று படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் தெலுங்கிற்கு சிறிது இடைவெளி விட்டு தமிழில் கவனம் செலுத்தவுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

TNN 9 Nov 2017, 6:33 pm
தான் நடித்த மூன்று படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் தெலுங்கிற்கு சிறிது இடைவெளி விட்டு தமிழில் கவனம் செலுத்தவுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
Samayam Tamil rakul preet singh who comes to tamil for a brief break from telugu
தொடர் தோல்வியால் தெலுங்கிற்கு சிறிது இடைவெளி விட்டு தமிழுக்கு வரும் ரகுல் பரீத் சிங்!


நடிகை ரகுல் பரீத் சிங் தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறத்தாக்க’ ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கிற்கு சென்றார் ரகுல் பிரீத் சிங். அங்கு தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.

ஆனால் இந்த 2017-ம் ஆண்டு அவர் நாயகியாக நடித்து ‘வின்னர்’, ‘ராரண்டாய் வேடுக சுதம்’, ‘ஜெய ஜானகி நாயகா’, ‘ஸ்பைடர்’ என நான்கு படங்கள் வெளியாகின. அப்படி வெளியான நான்கு படங்களில் ‘ராரண்டாய் வேடுக சுதம்’ மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற மூன்று படங்களுமே தோல்வி அடைந்தன. அதனால் அடுத்தபடியாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு புதிய தெலுங்கு படங்கள் எதுவும் கமிட்டாகவில்லை.
அதனால் ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படத்துக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார். அடுத்தபடியாக தமிழில் விஜய்யின் 62 வது படம், சூர்யா & -செல்வராகவன் இணையும் படங்களில் நடிக்கவுள்ளார். மேலும் இந்தியில் ‘அய்யாரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்