ஆப்நகரம்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘தீரன்‘ பட நாயகி‘

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ‘தீரன்’ பட நாயகி ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2018, 3:04 pm
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ‘தீரன்’ பட நாயகி ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil rakul-SK


மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதையடுத்து அவர் கார்த்தி மனைவியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில்நடித்தார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாகவும், மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் சிவக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் 24 ஏஎம்ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்