ஆப்நகரம்

தன் உடையை ஆபாசமாக விமர்சிப்பவர்கள் பற்றி பேசிய ராகுல் ப்ரீத்

தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் ப்ரீத்.

Samayam Tamil 17 Mar 2020, 11:03 am
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். தற்போது ஹிந்தி சினிமாவிலும் படிப்படியாக தடம் பதித்து வருகிறார் அவர். சென்ற வருடம் அவர் நடித்த இரண்டு பாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் அவர்.
Samayam Tamil Rakul Preet hits back at Trolls and slut shaming in social media


தற்போது புகழின் உச்சியில் இருக்கும் அவரை சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக ட்ரோல் செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பற்றியும் ட்ரோல்களால் வரும் மன உளைச்சல் பற்றியும் ராகுல் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

"என் கவனத்தை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் பேசுபவர்கள் பற்றி நான் கண்டுகொள்வதில்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை."

"ஒருமுறை நான் சிறிய உடை அணிந்து காரில் இருந்து இறங்கி வந்த போட்டோவை பதிவிட்டு ஒரு நபர் "When she forgot to wear her pant after the session in the car" என குறிப்பிட்டிருந்தார். அன்று காலையில் அந்த போஸ்ட் பார்த்து கோபம் ஆனேன். அதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியவில்லை,"

"உங்கள் அம்மா அப்படி அடிக்கடி காரில் செய்வார் போல. அதனால் தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது என பதில் கூறினேன். இப்படிப்பட்ட நபர்கள் இருக்கும் வரை பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெண்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு என பேசினால் மட்டும் போதாது."

"சமூகத்தில் இப்படி இருக்கும் ஒரு சிலரை எதுவுமே செய்யமுடியாது. போலி கணக்குகளில் முகத்தை மறைத்துக்கொண்டு இப்படி பேசுபவர்கள் தங்களின் விமர்சனத்திற்கு பிரபலங்கள் பதில் அளித்தால் அதை வைத்து பெயர் தேடுகிறார்கள்," என கோபத்துடன் பேசியுள்ளார் ராகுல் ப்ரீத்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்