ஆப்நகரம்

எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை வேண்டும்.. ராகுல் ப்ரீத் போட்ட கண்டிஷன்கள்

ராகுல் ப்ரீத் தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில கண்டிஷன்களை போட்டுள்ளார். முழு விவரம் உள்ளே.

Samayam Tamil 10 Jul 2020, 5:47 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் சமீப வருடங்களில் பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் சில பாலிவுட் படங்களும் வைத்திருக்கிறார் அவர். அவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
Samayam Tamil Rakul Preet Singh


இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் காதல் மற்றும் திருமணம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். காதல் மற்றும் திருமணம் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ள அவர், அதை ஒரு சிலர் 'ஒரு விதமான பிரஷர்' என்று கூறுவதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என கூறியுள்ளார்.

தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி பேசிய அவர் "நான் தொடர்ந்து மாற்றங்களைக் கண்டு வருகிறேன். முன்பு இருந்தது போல நான் இப்போது இல்லை. என்னை பொறுத்தவரை காதல் என்பதற்கு அர்த்தம் என் பெற்றோரிடம் தான் நான் பார்க்கிறேன். திருமணம் மற்றும் காதல் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அது மிகவும் அழகானது என்று தோன்றுகிறது. நீங்கள் ஒருவரை காதலித்தால் உங்கள் முழு மனதுடன் இதயப் பூர்வமாக காதலிக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் தான். அதை ஒரு சிலர் ஒரு விதமான பிரஷர் என கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

தனக்கு எப்படி ஒரு கணவர் வேண்டும் என்பது பற்றியும் அந்த பேட்டியில் ராகுல் ப்ரீத் பேசியுள்ளார். "முக்கியமாக எனக்கு அவர் மிகவும் உயரமாக இருக்க வேண்டும். நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை பார்ப்பதற்கு தலையைத் தூக்கி தான் பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும். மேலும் இரண்டாவதாக நான் பார்க்கும் விஷயம் அவர் ஒரு புத்திசாலியாக அறிவாற்றல் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நோக்கத்துடன் இருப்பவராக இருக்க வேண்டும்" என ராகுல் ப்ரீத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே ஆசை என தெரிவித்துள்ள அவர் கூறியிருப்பதாவது..

"நான் எப்போதும் நடிகை ஆக வேண்டும் என்று தான் விரும்புவேன். மிக குறைந்த வயதிலேயே நான் மாடலிங் செய்யத் துவங்கி விட்டேன். அப்போது எனக்கு 18 வயது இருக்கும். கொஞ்சம் பாக்கெட் மணிக்காக நான் என்னுடைய முதல் படத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு என்னை கவனிக்கத் துவங்கினர். அதன் பிறகு கன்னட சினிமா துறையில் எனக்கு முதல் பெரிய வாய்ப்பு கிடைத்தது" என ராகுல் கூறியுள்ளார்

"மேலும் படிப்பை முடித்த பிறகு தான் சினிமாவில் முழு நேரம் களம் இறங்க வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். அதனால் பல பட வாய்ப்புகளை நான் நிராகரித்தேன். சிறிய சிறிய ரோல்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஏனென்றால் எனக்கு வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்தது. அதனால் அதை சரி செய்ய பெரிய ரோல்களை நான் ஒப்புக்கொள்ளவில்லை."

"எனக்கு ஒரு விஷயத்தை பிடித்திருந்தால் மட்டுமே அதை நான் செய்யத் துவங்குவேன். முதலில் நான் முக்கியத்துவம் தரும் விஷயம் சினிமா, அதற்குப் பிறகு பிட்னெஸ், மற்றும் மூன்றாவதாக உணவு" என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ராகுல் ப்ரீத் அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் தற்போதும் சிங்கிளாக தான் இருப்பதாகவும், அதற்கு காரணம் அவரது தம்பி தான் இன்றும் கூறியிருந்தார். பள்ளிக் காலத்திலிருந்து தான் எந்த ஆண்களுடனும் பேசுவதைப் பார்த்தால் அவரது தம்பி வீட்டில் சென்று பெற்றோரிடம் கூறி விடுவானாம். அதனால் அப்போதிருந்தே நான் சிங்கிள் தான் என ராகுல் ப்ரீத் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்