ஆப்நகரம்

முதல் பாகத்தில் பட்ட கஷ்டத்தை இரண்டாம்பாகத்திலும் படமாட்டேன்: நடிகை சமந்தா!

முதல் பாகத்தில் பட்ட கஷ்டத்தை இரண்டாம் பாகத்திலும் பட முடியாது என்று கூறி ‘ரங்கஸ்தலம்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுவிட்டார் நடிகை சமந்தா!

Samayam Tamil 19 Apr 2018, 1:27 pm
முதல் பாகத்தில் பட்ட கஷ்டத்தை இரண்டாம் பாகத்திலும் பட முடியாது என்று கூறி ‘ரங்கஸ்தலம்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுவிட்டார் நடிகை சமந்தா!
Samayam Tamil Samantha


நடிகை சமந்தா திருமணத்துக்குப் பின்பும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியான படம் ‘ரங்கஸ்தலம்’. மேலும் இவர் நடிப்பில் உருவான சில படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்தப் படம் தற்போது வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி நடிகை சமந்தா கூறுகையில், ‘‘அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் கடும் வெயிலில் நின்று நடித்ததுபோன்று வேறு படத்திற்கு நடித்ததில்லை. காலில் செருப்பு போடாமல் சுடுமணலில் நின்று நடித்தேன். இந்தப் படத்தின் வெற்றி, அப்போது பட்ட கஷ்டத்தை மறக்கடித்து விட்டது. படம் வெற்றி பெற்றதால் இதன் 2 ஆம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டால் அதில் நான் நடிக்க மாட்டேன். காரணம் ‘ரங்கஸ்தலம்’ முதல் பாகத்தில் பட்ட கஷ்டத்தை மீண்டும் படவிடமாட்டேன்’’ என சமந்தா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்