ஆப்நகரம்

ராம் சரண் மனைவிக்கு சிறந்த கொடையாளர் விருது!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவுக்கு சிறந்த கொடையாளர் என்கிற விருது கிடைத்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 4:46 pm
2019ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா சமீபத்தில் டில்லியில் நடைபெற்றது. இந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவர் தாதா சாஹேப் பால்கே என்பதால் இவர் `இந்திய சினிமாவின் தந்தை' என்ற புகழைப் பெற்றார்.
Samayam Tamil Ram-charan


இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார். இவரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் இயக்குநர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் தாதா சாகெப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா சமீபத்தில் டில்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனாவுக்கு சிறந்த கொடையாளர் என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது. சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டு உதவிக்கரம் நீட்டி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நேர்மறையான எண்ணங்களுடன் தன்னை உற்சாகப்படுத்திவரும் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் உபாசனா கூறியுள்ளார்.. மனைவிக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்தது குறித்து நான் மிகவும் பெருமைப்படுவதாக ராம்சரண் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்