ஆப்நகரம்

இன்சூரன்ஸ் பணத்திறகாக செட்டை கொளுத்தியதாக நடிகர் மீது பழி!

இன்சூரன்ஸ் பணத்திறகாக செட்டை கொளுத்தியதாக நடிகர் மீது பழி!

Samayam Tamil 11 May 2019, 3:17 pm
பிரபல நடிகர் ராம் சரண், இன்சூரன்ஸ் பணத்திற்காக படப்பிடிப்பை செட்டை கொளுத்தியதாக அவர் மீது பலர் பழி சுமத்தியுள்ளனர்.
Samayam Tamil ram-charan


நடிகர் ராம் சரண் தேஜா சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் செலவு ரூ.200 கோடி. இந்த படத்தில், சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவின் பண்ணை வீட்டு வளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ.2 கோடிக்கும் மேலாக விலை மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ராம் சரண்தான் பணம் இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்திற்காக செட்டை கொளுத்தினார் என ஊடங்களில் வதந்தி பரவியது. இது எப்படியோ ராம் சரண் காதுகளுக்கு போக அவர் பயங்கர கடுப்பாகி விட்டாராம். மேலும், ரூ.200 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை தயாரிக்கிறேன், கேவலம் ரூ.2 கோடி இன்சூரன்ஸுக்காக செட்டை எரிப்பேனா என்று கொந்தளித்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்