ஆப்நகரம்

நாகர்ஜுனா திறமை மீது நம்பிக்கை உள்ளது: ராம்கோபால் வர்மா!

நாகர்ஜுனா திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்

TNN 23 Nov 2017, 6:14 pm
நாகர்ஜுனா திறமை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.
Samayam Tamil ram gopal varma has said that he is confident of actor nagarjunas talent
நாகர்ஜுனா திறமை மீது நம்பிக்கை உள்ளது: ராம்கோபால் வர்மா!


நாகர்ஜுனாவும், ராம்கோபால் வர்மாவும் ஒன்றாக இணைந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி ‘சிவா’ என்ற படத்தைத் தந்தனர். படம் சூப்பர் ஹிட்டானாலும், அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை. 28 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இணைந்து இருவரும் பணியாற்றவுள்ளனர். பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய ராம்கோபால் வர்மா, “எனக்கு கற்பனைத்திறன் போய்விட்டதாக மக்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், நான் யார் என இந்தப் படம் மூலம் நிரூபித்துக் காட்டுவேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், நாகர்ஜுனா திறமை மீது முழு நம்பிக்கை உள்ளது” என்று பேசினார். இந்தப் படத்தில் போலீஸ் ஆபீசராக நாகார்ஜுனா நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்