ஆப்நகரம்

நடிகைகள் மீது சரக்கு ஊற்றிய ராம் கோபால் வர்மா!!

தெலுங்கு திரையுலகில் இந்த வாரம் வெளியாகி நல்ல வசூலை குவித்துக் கொண்டிருக்கும் படம் "ஸிஸ்மார்ட் ஷங்கர்" இப்படத்தின் வேற்றி விழாவில் ராம் கோபால் வர்மா நடிகைகள் மீது பீரை ஊற்றியது தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2019, 9:59 am
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் பாராட்டுப் பெற்றவர் ராம் கோபால் வர்மா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான கதைகள் கிரைம், ஹோரர், திரில்லர் கதைகளாகத்தான் இருக்கும்.
Samayam Tamil df7f929b-b86d-443c-8448-4b5631644528


ராம் கோபால் வர்மா அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் இந்த வாரம் வெளியாகி நல்ல வசூலை குவித்துக் கொண்டிருக்கும் படம் "ஸிஸ்மார்ட் ஷங்கர்" இப்படத்தின் வேற்றி விழாவில் நடிகைகள் மீது பீரை ஊற்றியது தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பிகில் போஸ்டரும் காப்பி? போட்டுக் கிழிக்கும் இணையவாசிகள் !!

ராம் கோபால் வர்மா

இப்படத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தராரித்தும் உள்ளார் பூரி ஜெகநாத். பூரி ஜெகநாத் ரம்கோபால் வர்மாவின் துணை இயக்குநராக இருந்தவர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சக்சஸ் பார்ட்டியில் ராம் கோபால் வர்மாவும் பங்கேற்றிருந்தார். அப்பொழுது படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்களும் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

சார்மி

அந்த சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா விருந்துக்கு வந்த நடிகைகள் சார்மி, நாபா, நடேஷ், நித்தி அகர்வால் ஆகியோர் மீதும் அவர்கள் தோழிகள் மீதும் மதுபானப் பாட்டிலை நன்கு குலுக்கி அவர்கள் மீது ஊற்றியுள்ளார். தன் மீதும் ஊற்றிக் கொண்டுள்ளார்.
அடக்கொடுமையே... "ஆடை" பட பிரச்னையை தீர்க்க அமலா பால் செஞ்ச காரியத்தைப் பாருங்க!

சார்மி

அப்பொழுது அங்கிருந்தவர்கள் அதை வீடியோ பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோவை ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்திருந்தார். இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்
சக்சஸ் பார்டி என்றால் நண்பர்களுடன் குடித்து கும்மாளம் அடிக்கவேண்டும் என்றில்லை. அந்த பணத்தில் இயலாதவர்களுக்கு, முதியவர்களுக்கு, படிக்க வசதியில்லாத ஏழைகளுக்கு உதவி செய்யலாம். என இணையவாசிகள் ராம் கோபால் வர்மாவை சாடி வருகின்றனர். வரும் காலங்களில் இப்படி எதாவது நல்ல செய்தி கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்