ஆப்நகரம்

கொரோனா வைரஸ் படம்: லாக் டவுனில் ஷூட்டிங்கை முடித்த ராம் கோபால் வர்மா! ட்ரெய்லர் இதோ

லாக்டவுனில் கொரோனா வைரஸ் பற்றிய முழு நீள திறப்பததை எடுத்து முடித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

Samayam Tamil 27 May 2020, 4:59 pm
ச்தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது கொரோனா வைரஸ் பற்றி ஒரு முழு திரைப்படத்தையே இயக்கி உள்ளார். அதையும் அவர் கொரோனா லாக்டவுனில் முழுமையாக எடுத்து முடித்துள்ளார்.
Samayam Tamil Corona Virus Movie


கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலரை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். லாக்டவுனில் இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றித்தான் முழு படமும் இருக்கிறது. தனிமைப் படுத்திக்கொண்டு இருக்கும் ஒரு குடும்பத்தினர் இருக்கும்போது அதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் சளி, இருமல் இருக்கிறது. அது கொரோனாவா என மொத்த குடும்பமும் பயத்தில் இருக்கும் நிலையில் என்ன செய்கிறது என்பது பற்றியது தான் இந்த படம்.

ட்ரைலர் பார்க்கும்போது ஹாரர் படம் போல அதிக இருட்டில் இருப்பது போல தோன்றி இருக்கலாம். ஆனால் இது ஹாரர் படம் இல்லை என விளக்கம் கூறியுள்ளார் இயக்குனர்.

இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ள ராம் கோபால் வர்மா, "கொரோனா வைரஸ் ஹாரர் படம் இல்லை. அது நம் மனதுக்கு உள்ளே இருக்கும் பயத்தை பற்றியது. சிறந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நமக்கு தெரிந்த அளவிலான விஷயங்கள் மட்டுமே தெரியும். உண்மையில் எதுவுமே தெரியாது. 'எனக்கு தெரிந்த ஒரே விஷயம், எனக்கு எதுவும் தெரியாது என்பது தான் - சாக்ரடீஸ்" என கூறி உள்ளார்.


கொரோனா வைரஸ் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டி பேசியுள்ளார்.

"இந்த ராம் கோபால் வர்மாவை அடக்க முடியாது. பலருக்கு 'ராமு'.. ஆனால் எனக்கு 'சர்க்கார்".. அவர் லாக் டவுனில் இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றி ஒரு முழு படத்தையும் எடுத்துள்ளார். அதுவும் லாக்டவுனில் தான் படமாக்கியுள்ளார். கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இந்த வைரஸ் பற்றி உருவாக்கப்பட்டுள்ள முதல் படம். இதுதான் ட்ரைலர்" என குறிப்பிட்டு அந்த படத்தின் ட்ரைலரை பகிர்ந்துள்ளார் அவர்.

அதற்கு நன்றி கூறியுள்ள ராம் கோபால் வர்மா "நன்றி சார்.. இந்த சுங்கோ முங்கோ வைரஸ் என்னை லாக் டவுன் செய்ய விடமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.


மற்ற சினிமா பிரபலங்கள் வீட்டில் குப்பையை சுத்தம் செய்வது, சமைப்பது என நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், ராம் கோபால் வர்மா அந்த நேரத்தில் ஒரு முழு நீள திரைப்படத்தை எடுத்து முடித்துவிட்டார் என்பது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் விஷயம் தான்.

லாக் டவுனில் படப்பிடிப்பை நடத்தினாலும் தான் அரசின் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியதாக தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்