ஆப்நகரம்

நடிகர் ராமராஜன் திடீரென மருத்துவமனையில் அனுமதி! கொரோனா பாதிப்பா?

நடிகர் ராமராஜன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Samayam Tamil 18 Sep 2020, 12:40 am
இந்தியாவில் தற்போது குரானா வைரஸ் மிக அதிக அளவு பரவி வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்திருக்கும் நிலையில் அதில் நான்கு மில்லியன் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். பலி எண்ணிக்கையும் 83 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சினிமா துறையினர் பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனை கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார், தற்போது தான் அவருடன் நிலை படிப்படியாக சீராகி வருகிறது.
Samayam Tamil Ramarajan


இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான ராமராஜன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஒரு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

ராமராஜன் வீட்டிற்கு ஏசி மெக்கானிக் ஒருவர் சமீபத்தில் வந்து ஏசியை சரி செய்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ராமராஜன் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தன் உடல்நிலை முழுமையாக சீராகும் வரை மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி இருக்க ராமராஜன் முடிவெடுத்திருக்கிறார். கொரோனா டெஸ்ட் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் முடிவு நாளை தான் வரும் என்று தெரிகிறது. டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் ராமராஜனுக்கு அடுத்து வழங்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

எழுபதுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராமராஜன் தன்னுடைய திரைப்பட கெரியரை இயக்குனர் ஆகத்தான் துவங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அதன் பிறகு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராமராஜன். அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன. இவர் கடைசியாக 2012ல் வெளிவந்த மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் அவர் விரைவில் மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்