ஆப்நகரம்

நண்பர்கள் இல்லாமல் வீட்டில் எளிமையாக கொண்டாடிய ரம்பா: என்ன விஷேசம் பாருங்க! வைரல் வீடியோ

ஊரடங்கு நேரத்தில் நடிகை ரம்பா வீட்டில் எளிமையாக 10வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2020, 4:01 pm
90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. அஜித், விஜய், கார்த்திக், பிரஷாந்த் என அந்த சமயத்தில் இருந்த முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் அவர். புகழின் உச்சியில் இருந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போதும் உள்ளனர்.
Samayam Tamil Rambha with her family


2010ல் அவர் திருமணம் செய்துகொண்டு தனது கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார் அவர். தற்போது அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஏப்ரல் 11ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெற்று 10 வருடங்கள் முடிந்ததால் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணாமாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்களும் ரம்பா-இந்திரகுமார் ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

View this post on Instagram Due to this current situation throughout the world, without no friends and relatives around us and just me, my husband, my kids(laanya, sasha & shivin), had a celebration - just by staying in the home. This is one of the best function we ever had because it had a very personal touch & very intimate. We made our own arrangements within the home by helping each other. We baked the cake together which is very special than ordering outside. Every single part of the cake has our 10 years of love story. Overwhelmed with happiness, as my daughters- Laanya and Sasha made a surprise special card for us. During hard times, still, we all can be happy with love & togetherness, which does not require any money nor any special gifts. Everyone, #staystrong and spend your time with your family and #staysafe! #tenyearsoftogetherness #quarantine #familytime #loveintheair A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on Apr 12, 2020 at 11:56am PDT

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் இன்றி இந்த எளிமையான திருமண நாள் கொண்டாட்டம் பற்றி பேசியுள்ள ரம்பா, "உலகம் முழுவதும் தற்போது உள்ள நிலைமை காரணமாக, நண்பர்கள் உறவினராகில் யாரும் உடன் இல்லாமல், நான் என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபடி கொண்டாடினோம்."

"நாங்கள் கொண்டாடியதிலேயே இது தான் மிகவும் சிறப்பான ஒன்று. ஏனென்றால் இதில் மனதிற்கு நெருக்கமான பல விஷயங்கள் இருந்தது. நாங்களே இணைந்து கேக் தயார் செய்தோம். வெளியில் இருந்து வாங்குவதை விட அது ரொம்ப ஸ்பெஷல். அந்த கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் எங்கள் 10 ஆண்டு காதல் கதை இருக்கும்.

எங்கள் மகள்கள் லான்யா மற்றும் சாஷா ஒரு ஸ்பெஷலான கார்டு கொடுத்து சர்ப்ரைஸ் செய்தனர். இந்த கடினமான நேரத்திழும் நாம் சந்தோஷமாக இருக்க முடியும். அதற்கு எந்த பணமும் தேவை இல்லை, ஸ்பெஷல் கிப்ட் கூட தேவை இல்லை.

"அனைவரும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என ரம்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்