ஆப்நகரம்

தலைவன் பிறந்து இருக்கிறான்: குழந்தை பிறந்ததை அறிவித்த ரமேஷ் திலக்

நடிகர் ரமேஷ் திலக் - நாவலக்ஷ்மி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

Samayam Tamil 30 Jul 2020, 12:02 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரமேஷ் திலக். இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து அதன் பிறகு நடிகராக அறிமுகமானவர். நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் படத்தின் மூலமாக இவர் நடிகராக பிரபலம் ஆனார். அதற்கு முன்பு மெரினா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் வசனம் கூட இல்லாத கேரக்டரில் நடித்துள்ளார். அதற்கு பிறகு நேரம், வாயை மூடி பேசவும் டிமான்டி காலனி, காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் அவர். இவர் எப்போதுமே அதிக அளவு தாடியுடன் இருக்கும் தோற்றத்தில் தான் அனைத்து படங்களிளும் நடித்து வருகிறார்.
Samayam Tamil Ramesh Thilak


சென்ற வருடம் மட்டும் அவர் நான்கு படங்களில் நடித்திருந்தார். அதில் அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒன்று. மேலும் இந்த வருடம் அவரது நடிப்பில் கடைசியாக ஓ மை கடவுளே படம் தான் ரிலீஸ் ஆகி இருந்தது. நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் கடவுளின் அசிஸ்டெண்டாக ரமேஷ் திலக் தோன்றி இருப்பார். அது சிறிய கெஸ்ட் ரோல் தான்.

மேலும் ரமேஷ் திலக் அடுத்து தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஒரு ரோலில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸுக்காகத்தான் அவரும் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரமேஷ் திலக் ட்விட்டரில் அறிவித்திருக்கிறார். தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என அவர் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார். "எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு அதிகளவு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரமேஷ் திலக்கின் மனைவி நாவலக்ஷ்மியும் ரேடியோ ஜாக்கி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் காதலித்து இரண்டு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

பிரபல ஃபைட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் அவர்களின் மகள் தான் நவலக்ஷ்மி. ரமேஷ் திலக் மற்றும் நாகலட்சுமி இருவரும் சூரியன் எஃப் எம் இல் பணியாற்றியபோது காதலிக்க துவங்கி இருக்கிறார்கள். காதலுக்கு பெற்றோர்கள் ஒப்புதல் வழங்கிய நிலையில் 2018 மார்ச் மூன்றாம் தேதி இவர்கள் திருமணம் பெசன்ட் நகர் முருகன் கோவிலில் நடைபெற்றது. அதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு நடைபெற்ற அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். நடிகர் விஜய் சேதுபதியும் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

ஒரு பேட்டியில் பேசும் போது ரமேஷ் திலக் தான் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியிருந்தார். அவர் அதற்கு முன்பு விஜய்யின் தெறி, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த வாய்ப்புகள் சில காரணங்களால் அமையாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு தான் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் ஒரு முக்கிய ரோலில் இவரை தான் நடிக்க கேட்டாராம் ஆனால் அதுவும் நடிக்க முடியாமல் போய் விட்டது என தெரிவித்திருந்தார். அதன் பிறகு தான் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ஷூட்டிங்கில் பங்கேற்று தன்னுடைய பகுதியையும் அவர் நடித்து முடித்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பேசிய விஜய், ரமேஷ் திலக் நடித்த கும்பலங்கி நைட்ஸ் படத்தை தான் பார்த்ததாக கூறி இவரை பாராட்டினாராம்.

பல மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி! வைரல் புகைப்படங்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்