ஆப்நகரம்

சிவாஜி சிலையை எங்க வைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்: ராம்குமார்

சிவாஜி சிலையை எங்க வைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

TNN 21 Jul 2017, 3:11 pm
சிவாஜி சிலையை எங்க வைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ramkumar speaks about actor sivajis staue in chennai
சிவாஜி சிலையை எங்க வைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்: ராம்குமார்


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையிலுள்ள அவரது சிலைக்கு ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்ற நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய அரசியல் தலைவர்கள் சிவாஜி சிலையை மணிமண்டபத்திற்கு மாற்றி அமைக்கக் கூடாது என்று கூறினர்.

அதன் பின்னர் பேசிய நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் கூறுகையில், சிவாஜிக்கு சிலை வைக்கப்படுவதே பெரிய விஷயம். தமிழக அரசு சிவாஜிக்கு செய்யும் மரியாதையும் அது தான். அவரது சிலையை எங்கு வைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார். அவருடன் சிவாஜியின் பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்