ஆப்நகரம்

போலீசாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் போலீசாக நடித்து வருகிறார்.

TNN 20 Feb 2017, 4:34 pm
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் போலீசாக நடித்து வருகிறார்.
Samayam Tamil ramya krishnan plays the role of the police
போலீசாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்!


நடிகை ரம்யாகிருஷ்ணன், 32 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். ஆரம்பரத்தில் கவர்ச்சிகரமாக நடித்த ரம்யா கிருஷ்ணன், பின்னர் தெலுங்கில் அம்மன் வேடங்களில் தோன்றினார். அதேபோல் தமிழில் ரஜினியுடன் நடித்த ‘படையப்பா’படத்திற்குப் பிறகு அதிரடி நாயகியாகி விட்டார்.

மேலும், திருமணத்திற்கு பிறகு எல்லா நடிகைகளையும்போலவே ரம்யா கிருஷ்ணனுக்கும் சினிமாவில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. என்றாலும், பின்னர் சீரியல் தயாரித்து நடிக்கத் தொடங்கிய அவர், ‘பாகுபலி’க்கு பிறகு மறுபடியும் கவனிக்கப்படும் நடிகையாகியிருக்கிறார். தற்போது கமலின் ‘சபாஷ் நாயுடு’, ‘பாகுபலி-2’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரம்யாகிருஷ்ணனை கெத்தான போலீசாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Ramya Krishnan plays the role of the police!

அடுத்த செய்தி

டிரெண்டிங்