ஆப்நகரம்

பிபி, இதய கோளாறு, கிட்னி ஃபெயிலியர்: சமந்தா நிகழ்ச்சியில் கண் கலங்கிய ராணா

சமந்தா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்து முதல்முறையாக பேசியுள்ளார் ராணா.

Samayam Tamil 23 Nov 2020, 5:22 pm
சமந்தா சாம் ஜாம் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வாழ்க்கை, சினிமா பற்றி பேசுகிறார்கள். விஜய் தேவரகொண்டா தான் முதல் கெஸ்ட். அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
Samayam Tamil rana daggubati


இந்நிலையில் சாம் ஜாம் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரொமோவை பார்த்த ராணாவின் ரசிகர்கள் கண் கலங்கியுள்ளனர்.
அந்த வீடியோவில் ராணா கூறியிருப்பதாவது,

வாழ்க்கை வேமாக சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று பாஸ் பட்டன் வந்தது. ரத்த அழுத்தம், இதயத்தை சுற்றி கால்சியம் சேர்ந்துவிட்டது, மேலும் சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன...வாதம் அல்லது ஹெமரேஜ் ஏற்பட 70 சதவீத வாய்ப்பு மேலும் நேராக மரணம் ஏற்பட 30 சதவீத வாய்ப்பு என்று கூறி ராணா கண் கலங்கினார். அதை பார்த்த சமந்தா மற்றும் பார்வையாளர்களும் எமோஷனலானார்கள்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணா எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் ராணாவுக்கு உடல்நலம் சரியில்லை போன்று என்று பேசத் துவங்கினார்கள். ராணாவுக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து ராணா அப்பொழுது கூறியதாவது,

என்னை பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு யூகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்து எனக்கும் அலுத்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். அதனால் என் உடல்நலம் குறித்த வதந்திகள் போர் டாபிக். நான் எப்பொழுது ஹைதராபாத்தில் இருந்து கிளம்பினாலும் மக்கள் ஏதாவது பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் அன்புக்கு நன்றி என்றார்.

தன் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது குறித்து தற்போது தான் ராணா மனம் திறந்து பேசியுள்ளார்.

வேணாம் தலைவா, சொன்னா கேளுங்க: ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை

அடுத்த செய்தி

டிரெண்டிங்