ஆப்நகரம்

பாகுபலிக்கு பிறகு மீண்டும் புராண கால படத்தில் நடிக்கும் ராணா!

ராணாவின் தந்தை சுரேஷ் பாபு, தயாரிக்கும் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் புராண படத்தில் ராணா நடிக்கிறார்.

Samayam Tamil 6 Jul 2018, 7:05 pm
ராணாவின் தந்தை சுரேஷ் பாபு, தயாரிக்கும் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் புராண படத்தில் ராணா நடிக்கிறார்.
Samayam Tamil raana


‘பாகுபலி’ பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக ராணா நடித்திருந்தார். இந்தப் படத்தால் ராணா உலகம் முழுவதும் பிரபலமானார். அவர் தற்போது பல தெலுங்க்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட அசுர அரசன் இரண்யகசிபுவாக ராணா நடிக்கிறார். இந்த படத்தை ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடியாம். தமிழ், தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களை விட அதிக பட்ஜெட்டில் இவர் நடிப்பது சினிமா துறையில் உள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்