ஆப்நகரம்

Ajith:நண்பர்களுக்காக எதையும் செய்வார் அஜித்- மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே

அஜித் நடிக்கும் ’நேர்கொண்ட பார்வை’ பற்றியும் நடிகர் அஜித்தை பற்றியும் பல முக்கிய தகவலை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துள்ளார். மேலும் நண்பர்களுக்காக எதையும் அஜித் செய்வார் என்று அவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Mar 2019, 6:23 pm
அஜித் நடிக்கும் ’நேர்கொண்ட பார்வை’ பற்றியும் நடிகர் அஜித்தை பற்றியும் பல முக்கிய தகவலை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துள்ளார். மேலும் நண்பர்களுக்காக எதையும் அஜித் செய்வார் என்று அவர் கூறியுள்ளார்.
Samayam Tamil download (11)


சதுரங்கவேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.

மேலும், அந்த படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியில்லை. ஆனால், இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜித் மற்றும் வித்யா பாலனுக்கு டூயட் பாடல் ஒன்றும் இருக்கிறது என்று ஏற்பகனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் வெள்ளித்திரையில் தனது முதல் படத்தை நடிக்கும் ரங்கராஜ் பாண்டே நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘ நான் நடிக்கும் பாகங்களை முடித்துவிட்டேன்.15 நாட்கள் படப்பிடிப்பில் காலை முதல் மாலை வரை அஜித்துடன்தான் இருந்தேன், அவர் மனிதர்களிடம் பழகும் விதத்திலிருந்து அவரது நல்ல குணத்தை புரிந்துகொள்ள முடியும். மேலும் அவர் நண்பர்களுக்காக எதையும் செய்வார் ’’என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்