ஆப்நகரம்

அஜீத்திடம் இதை கற்றுக் கொண்டேன்: பிரபல பத்திரிகையாளர்!

நடிகர் அஜீத்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் என்று பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

TNN 17 Dec 2017, 1:08 pm
நடிகர் அஜீத்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் என்று பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.
Samayam Tamil rangaraj pandey talk about thala ajith kumar
அஜீத்திடம் இதை கற்றுக் கொண்டேன்: பிரபல பத்திரிகையாளர்!


ரங்கராஜ் பாண்டே ஒரு பத்திரிகையாளர். தொகுப்பாளர்களில் தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர் இவர்தான். இவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் இவரிடம் பேசும் போது எப்போதும் கொஞ்சம் பயத்துடனே தான் பேசுவார்கள். ஏனெனில் எதையாவது பேசி அவர்களிடமிருந்து வார்த்தையை வாங்கிவிடுவார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர் அஜீத்தைப் பற்றி கூறினார். அதில் ‘ஒரு மேடையில் நடிகர் அஜீத் சொல்கிறார், அதிக தோல்வி படம் கொடுத்தவன் நான் தான் என்று. மேலும், அந்த தோல்வியை முறியடித்து மீண்டும் மீண்டும் நான் எழுந்து வருவேன்’’ என்றும் சொல்கிறார். அஜீத் நடித்த படங்களில் நான் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இவரின் இந்த குணம் என்னை கவர்ந்தது’’ என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்