ஆப்நகரம்

காதலித்த மாணவியை கைப்பிடிக்கும் ‘ரங்கூன்’ பட இயக்குனர்!

ஒன்பது வருடமாக காதலித்த வந்த மாணவி ஜஸ்வினியை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் செய்யவுள்ளார்.

Samayam Tamil 14 May 2018, 1:05 pm
ஒன்பது வருடமாக காதலித்த வந்த மாணவி ஜஸ்வினியை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் செய்யவுள்ளார்.
Samayam Tamil rangoon


கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ரங்கூன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஆவார். இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டி.வியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியை இயக்கினார். அப்போது இண்டன்ஷிப் மாணவியாக வந்த ஜஸ்வினிக்கும் அவருக்கும் காதல் உருவானது. இந்த காதல் ஒன்பது வருடங்களாக தொடர்ந்து வந்தது.

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளனர். இவர்களின் திருமணம் இம்மாதம் 25ம் தேதி நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்