நடிகர் அஜித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் அஜித்தின் 59வது படமாகும். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிக எளிமையான பூஜையுடன் தொடங்கின. இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்‘ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 பெண்கள், தங்களது வழக்கறிஞரின் உதவியுடன் 3 ஆண்களுக்கு தண்டனை வாங்கித் தருவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித்தும், 3 பெண்களில் ஒருவராக டாப்சி நடித்த கேரக்டரில் நஸ்ரியாவும், 3 ஆண்களில் ஒருவராக‘ஏஏஏ’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நடிக்கின்றனர். குற்றம்சாட்டப்படும் 3 ஆண்களின் சார்பாக வாதிடும் வழக்கறிஞராக நடித்த பியூஷ் மிஷ்ரா கேரக்டரில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 பெண்கள், தங்களது வழக்கறிஞரின் உதவியுடன் 3 ஆண்களுக்கு தண்டனை வாங்கித் தருவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித்தும், 3 பெண்களில் ஒருவராக டாப்சி நடித்த கேரக்டரில் நஸ்ரியாவும், 3 ஆண்களில் ஒருவராக‘ஏஏஏ’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நடிக்கின்றனர். குற்றம்சாட்டப்படும் 3 ஆண்களின் சார்பாக வாதிடும் வழக்கறிஞராக நடித்த பியூஷ் மிஷ்ரா கேரக்டரில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.