ஆப்நகரம்

கபாலி படத்திற்காக ரஜினியைக் கொடுமைப்படுத்திய ரஞ்சித்!

கபாலி படப்பிடிப்பு பற்றிய ரகசியங்கள் மெல்ல கசியத் தொடங்கியுள்ளன.

TNN 22 Jul 2016, 4:04 am
கபாலி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். அதற்குப் பிறகு, கபாலி படப்பிடிப்பு பற்றிய ரகசியங்கள் மெல்ல கசியத் தொடங்கியுள்ளன.
Samayam Tamil ranjith maltreated rajinikanth for kabali
கபாலி படத்திற்காக ரஜினியைக் கொடுமைப்படுத்திய ரஞ்சித்!


கபாலி படத்திற்காக சூப்பர் ஸ்டாரை ரஞ்சித் கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் எப்போதுமே டப்பிங் பேசும் போது வேறு யாரையும் தன்னுடன் இருக்க அனுமதிப்பதில்லை. தளபதி படத்தில் மணிரத்னம் கடுமையாக போராடி டப்பிங் பேசும்போது ரஜினியுடன் இருக்க ஒப்புதல் பெற்றார். டப்பிங் பேசும் போது அவ்வளவு தனிமையை விரும்புகிறவர் சூப்பர் ஸ்டார்.

கபாலியிலும் டப்பிங் பேசிய முதல் நாளில் ரஜினி தனியாகவே இருந்திருக்கிறார். இயக்குனர் ரஞ்சித்துக்கு அந்த டப்பிங் திருப்தி இல்லாமல் தானும் உடன் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினி உடனே சம்மதித்துவிட்டாராம். அத்துடன் டப்பிங் முடிந்த பிறகு முதல் நாளில் பேசிய திருப்தி இல்லாத பகுதிகளையும் இன்னொரு முறை பேச வைத்து பதிவுசெய்துவிட்டாராம் ரஞ்சித்.

இதனால் டப்பிங் முடிந்தவுடன் ரஞ்சித்திடம் பேசிய ரஜினி, “என்னை இதுவரைக்கும் சினிமாவில் இரண்டு பேர்தான் கொடுமைப்படுத்தி இருக்காங்க. நீ மூணாவது ஆள்” என்று புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ரஜினியும் கபாலிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இரவு நேர படப்பிடிப்பை எப்போதும் தவிர்த்து வந்த அவர் கபாலிக்காக இரவு நேரங்களிலும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக்கொடுத்தாராம்.

இந்த தகவல்கள் எல்லாம் தெரிந்ததுமே, ரஜினி தன்னை இதுவரை கொடுமைப்படுத்தியது இரண்டு பேர் என்று சொன்னாரே…. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பரபரப்பாகிவிட்டனர் தீவிர ரஜினி ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்