ஆப்நகரம்

ரான்சம்வேர் வைரஸ் வைத்து புது கொள்ளை அடிக்கிறது அமெரிக்கா : ரஷ்யா குற்றச்சாட்டு

ரான்சம்வேர் எனப்படும் கணினியை தாக்குதல் புதிய வைரஸ் தான் கடந்த 2 தினங்களாக உலகத்தை அச்சுறுத்தும் செய்தியாக உள்ளது. இது நம் கணினியின் தகவல்களை ஹாக் செய்வதோடு, ஹாட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அழித்து விடுவதாக மிரட்டி 300 டாலர் பணம் கேட்டு மிரட்டுகின்றது.

TNN 16 May 2017, 2:29 pm
ரான்சம்வேர் எனப்படும் கணினியை தாக்குதல் புதிய வைரஸ் தான் கடந்த 2 தினங்களாக உலகத்தை அச்சுறுத்தும் செய்தியாக உள்ளது. இது நம் கணினியின் தகவல்களை ஹாக் செய்வதோடு, ஹாட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அழித்து விடுவதாக மிரட்டி 300 டாலர் பணம் கேட்டு மிரட்டுகின்றது.
Samayam Tamil ransomware attacks putin says russia is not responsible
ரான்சம்வேர் வைரஸ் வைத்து புது கொள்ளை அடிக்கிறது அமெரிக்கா : ரஷ்யா குற்றச்சாட்டு


இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 45,000க்கும் மேற்பட்ட கணினிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் 2000க்கும் மேற்பட்ட கணினிகளிலும், சீனாவில் 30,000க்கும் மேற்பட்ட கணினிகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இந்த வைரஸ் மைக்ரோ சாப்ட் கணினிகளில் தான் அதிகளவில் தாக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எங்கள் சார்பாக செய்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காதான் முழுக்காரணம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. நூதன முறையில் கொள்ளையடிக்கின்றது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்