ஆப்நகரம்

செல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம் - கன்டிஷன் போட்ட ரன்வீர் - தீபிகா

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் திருமணத்திற்கு வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

Samayam Tamil 17 Aug 2018, 1:38 am
பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் திருமணத்திற்கு வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
Samayam Tamil deepika-and-ranveer


விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடந்தது. அவர்களும் மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர். அதோடு, புகைப்படம் எடுக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தனர்.அதே நிலையை பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவும் கடைப்பிடிக்க உள்ளனர்.

30 பேருக்கு அழைப்பு :
இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் திருமணம் நிகழ்வு சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

திருமண தேதி :
இவர்களின் திருமணம் இத்தாலியில் நவம்பர் 20 தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் தம்பதியாக இந்தியா திரும்பிய பின்னர் மிக கோலாகலமாக ஆடம்பர திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்