ஆப்நகரம்

வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்!

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து பிரபல மாடல் அழகி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் வைஷக் ராஜன்.

Samayam Tamil 7 Jan 2019, 1:44 pm
மலையாள சினிமாவில் பல படங்களைத் தயாரித்து தற்போது பிரபலமாக இருந்த வருபவர் தயாரிப்பாளர் வைஷக் ராஜன். இவர் அழகி ஒருவரிடம் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
Samayam Tamil vaishak-rajan


தயாரிப்பாளர் வைஷக் ராஜன், மாடல் அழகியிடம் ‘‘உன்னிடம் தனியாக பேச வேண்டும்’’ என ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து அந்த அழகியை தயாரிப்பாளர் வைஷக் பலாத்காரம் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் வைஷக்கால் பாதிக்கப்பட்ட மாடல் அழகி, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலும் தயாரிப்பாளர் வைஷக் கைது செய்யப்படுவார் என்றே கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்