ஆப்நகரம்

‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியான ராஷிகண்ணா!

சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 8 Jan 2019, 1:58 pm
நடிகர் சிம்பு தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்ததாக நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார்.
Samayam Tamil manadu


இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் வெங்கட்பிரபு பிசியாக உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘அடங்கமறு’ திரைப்படம் ஒரு வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு சிம்புவின் பிறந்த நாளான 2020 பிப்ரவரி 3ல் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்