ஆப்நகரம்

நாய்களுக்காக தடையை மீறி வெளியில் சென்ற நடிகை: ட்விட்டரில் வெடித்த சண்டை

தான் நாய்களுக்கு உணவளிக்க வெளியில் சென்றதை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ராஷ்மி கவுதம்.

Samayam Tamil 2 Apr 2020, 11:19 am
2011ல் வெளிவந்த கண்டேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ராஷ்மி கௌதம். அந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அவர். அதன்பிறகு அவர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மி.
Samayam Tamil Rashmi Gautham


தற்போது கொரோனா காரணமாக சினிமா ஷூட்டிங் எதுவும் இல்லை என்பதால் வீட்டில் தான் இருக்கிறார் ராஷ்மி. அவர் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தான் வசிக்கும் பகுதியின் சுற்றுப்புறங்களில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். 'எதுவும் காரணம் சொல்லாதீர்கள், முகமூடி மற்றும் கையுறை அணிந்து வெளியில் சென்று இதுபோன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளியுங்கள்' என கூறியுள்ளார்.

இது பற்றி ஒரு நபர் ட்விட்டரில் விமர்சனம்செய்துள்ளார். "தடையை மீறி தான் வெளியே சென்றது மட்டும் இல்லாமல். மற்றவர்களையும் எதுவும் காரணம் சொல்லாமல் வெளியில் வாருங்கள் என அவர் அழைக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காதா?" என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த ட்விட்டை பார்த்து கோபமான நடிகை ராஷ்மி கவுதம் அவருக்கு பதிலாடு கொடுத்துள்ளார். "நான் விலங்குகளுக்கு உதவுகிறேன் என்பதால் தான் இந்த வெறுப்பு. நான் மனிதர்களுக்கு உதவுகிறேன் என்றால் இப்படி பேசவே மாட்டார்கள்."

"விலங்குகளுக்கு உணவளியுங்கள் என பிரதமர் மோடியே கூறியுள்ளார்" என பதில் அளித்துள்ளார் ராஷ்மி. இது தொடர்பாக ராஷ்மிக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்