ஆப்நகரம்

ரஷ்மிகாவை தேர்வு செய்ததற்கு இதுதான் காரணம்: ரோமியோ திரைப்படத்தின் இயக்குநர்!

ரோமியோ திரைப்படத்தின் இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். ஹோம்லி கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதற்காகவே இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Feb 2019, 2:47 pm
ரோமியோ திரைப்படத்தின் இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். ஹோம்லி கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதற்காகவே இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 68126696


தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படத்தில் வெளியான ’இன்கேம் இன்கேம்’ பாடல் செம ஹிட்டாகியது. இதைத்தொடர்ந்து அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரஷ்மிகா மந்தனா.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்று செய்திகள் பரவியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் பாக்யராஜ்கண்ணன் கூறியிருப்பதாவது ‘ ஹோம்லி கதாபத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஒருவரை நான் தேடி வந்தேன். ரஷ்மிகா மந்தனா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது.

இது ஆக்‌ஷன் கலந்த குடும்பத்திரைபடமாக அமைய உள்ளது. படத்தில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் யோகி பாபு மற்றும் மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்