ஆப்நகரம்

44வயதில் பாட்டியான கமல் ஹீரோயின்

நடிகை ரவீனா டாண்டன் 44 வயதில் பாட்டியாகியுள்ளதை மிகவும் சந்தோஷமாகத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 3:04 pm
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் தமிழில் அர்ஜுடன் இணைந்து சாது, கமலுடன் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். 44 வயதாகும் இவர் தனது 21வயதில் சாயா மற்றும் பூஜா என்று இரு குழந்தைகளை தத்துத்தெடுத்து வளர்ந்து வந்தார். இதில் சாயா, ஷான் மென்டீஸ் என்பவரைக் காதலித்துக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார்.
Samayam Tamil Raveena


இந்த நிலையில் அந்த தம்பதிக்கு சமீபத்தில் அழகிய குழந்தை பிறந்துள்ளது. 44 வயதில் பாட்டியாகியுள்ள விஷயத்தை மிகவும் சந்தோஷமாக நண்பர்களிடம் கூறியுள்ளார் ரவீனா. அதுமட்டுமின்றி குழந்தையை வரவேற்பதற்காக குடும்பத்தின் சார்பில் பல்வேறு விதமான பூஜைகள் நடைபெற்றுள்ளது.

இணையத்தில் லீக்கான சாய் பல்லவி வீடியோ: படக்குழு அதிர்ச்சி

அப்போது அந்த பூஜையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை ரவீனா சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக் கூறிய வண்ணம் உள்ளனர்.

44 வயதில் பாட்டியான கமல் ஹீரோயின்



அதுமட்டுமின்றி குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்