ஆப்நகரம்

களத்திற்கு வந்த உலகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரின் மகன்!

களத்திற்கு வந்த உலகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரின் மகன்!

TNN 14 Mar 2017, 9:16 am
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன், கௌதம் மேனனின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கௌதம் மேனன் படத்தில் மலையாள திரையுலகின் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சந்தானகிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 வயதாகும் சந்தான கிருஷ்ணன் தனது தந்தை ரவி.கே.சந்திரனிடம் உதவியாளராக பணிபுரியவில்லை. நமது குடும்பத்தில் உள்ளவர்களிடம் பணிபுரிந்தால் வேலையின் தீவிரம் தெரியாது என்றும், அதனால் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் ஒளிப்பதிவு கற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.
Samayam Tamil ravi k chandrans son santhanakrishnan handles camera for gautham
களத்திற்கு வந்த உலகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரின் மகன்!


கௌதம் மேனன் உடன் பணிபுரியும் அனுபவம் பற்றி கூறிய இவர், படப்பிடிப்பு களத்தில் ரொம்பவும் கூலான இயக்குநர் எனவும், தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் என்றும் கூறுகிறார். அதே போல் களத்தில் உள்ள எல்லோருக்கும் கௌதம் முழு சுதந்திரம் கொடுக்கிறார் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தன் தந்தையிடம் ஒளிப்பதிவு கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவருடைய வழிகாட்டுதல் எப்போதும் இருக்கிறது என்கிறார் சந்தான கிருஷ்ணன்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்