ஆப்நகரம்

தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயார்!- லாரன்ஸ் அதிரடி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நபர்களில் ஒருவரான லாரன்ஸ் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.

TNN 31 Jan 2017, 9:16 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நபர்களில் ஒருவரான லாரன்ஸ் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.
Samayam Tamil ready to enter politics says lawrence
தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயார்!- லாரன்ஸ் அதிரடி


ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என இளைஞர்கள் தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதில் சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த முக்கிய நபர்களில் ஒருவர் ராகாவா லாரன்ஸ்.



ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் விதமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அப்போது மக்கள் மனதில் ஒரு பெருமதிப்பு பெற்றார்.
இந்நிலையில் ‘தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயாராக உள்ளேன். என்னுடன் இருக்கும் மாணவர்கள் இதுவரை எந்த கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

மெரினா போராட்டத்தின் போது என் மனைவியின் நகையை அடகுவைத்து போராட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்.’ என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்