ஆப்நகரம்

இளையராஜா மோடியை புகழ்ந்ததுக்கான காரணம் இதுவா..?: பரபர பின்னணி.!

இசையமைப்பாளர் இளையராஜா 'மோடியும் அம்பேத்கரும்' புத்தகத்தில் மோடி குறித்து எழுதியுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2022, 10:00 am
'மோடியும் அம்பேத்கரும்' என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்படும் இளையராஜா இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத்தியுள்ளார். இந்த விவாகாரம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Ilaiyaraaja
Ilaiyaraaja


'மோடியும் அம்பேத்கரும்' புத்தகத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நிர்வாகத்தினால், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.

டாக்டர் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது தவறானது எனவும், முரணானது எனவும் பலரும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இளையராஜாவின் கருத்து முற்றிலும் சரியானது என அவருக்கு ஆதரவாக பாஜகாவை சேர்ந்த சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தலைவரை வசமாக சிக்க வைத்த விஜய், அஜித்: இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!
இந்நிலையில் இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுநர் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த பதவியில் இளையராஜா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் இளையராஜா இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இதற்காகவே இளையராஜா மோடியை புகழ்ந்து பேசியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சை கிளப்பியுள்ளது. இதனிடையில் இளையராஜா தனது கருத்தை திரும்ப பெற மாட்டார் என அவரின் தம்பி கங்கை அமரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்